தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை : சமூக வலைத்தளங்களில் வினாத்தாள் வெளியிடத்தடை!

Friday, August 3rd, 2018

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்குப் பின்னர் பரீட்சை வினாத்தாள்களை இரகசியமாக வைத்திருத்தல், சமூக வலைதளங்களில் பகிருதல் மற்றும் பத்திரிகைகளில் பிரபலப்படுத்துவது உள்ளிட்டவை தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன் புலமைப் பரிசில் பரீட்சை வினாத்தாள்களை விற்பது அல்லது அச்சிடுவதும் முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளதாகவும் குறித்த அறிவித்தலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, பரீட்சை நடைபெறும் எதிர்வரும் 05ஆம் திகதியன்று பரீட்சை இடம்பெறும் கால நேரத்தில் பரீட்சை நிலையங்களாக பயன்படுத்தப்படும் பாடசாலைகளில் அதிபர்கள் காரியாலயம் மூடப்பட்டு இருக்க வேண்டும் என்றும், பரீட்சை நடவடிக்கைகளுக்கு சமூகமளிக்கும் ஆசிரியர்கள் அதற்கு சம்பந்தப்பட்டோர் தவிர்ந்த வேறு எவரும் குறித்த காலப்பகுதியில் பரீட்சை நிலையங்களுக்கு உள்வாங்குவதும் தடை செய்யப்பட்டுள்ளது.

Related posts: