இந்திய அரசு மனிதாபிமன உதவி – ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு யாழ் முஸ்லிம் மக்களுக்கு உதவித்திட்டம் வழங்கிவைப்பு!

Tuesday, March 25th, 2025


இந்திய அரசின் மனிதாபிமான உதவித் திட்டத்தின் கீழ் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு யாழ் மாவட்டத்தில் உள்ள முஸ்லிம் மக்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன.

யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாச்சார மையத்தில் இந்திய துணைத்தூதுவர் சாய் முரளி தலைமையில் குறித்த மனிதாபிமான உதவி விநியோகம் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் வடக்கின் ஆளுனர் வேதநாயகன் கலந்து சிறப்பித்து உதவிப் பொருட்கள் வழங்கி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: