உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் ஏப்ரலில் வெளிவரும் – அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் அறிவிப்பு!
Monday, January 18th, 2021எதிர்வரும் ஏப்ரல் மாதம் உயர்தர பரீட்சை பெறுபேறுகளை வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
அத்துடன் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்படும் மாணவர்களை பெறுபேறுகளுக்கமைய செப்டம்பர் மாதமளவில் பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
முன்பதாக கொரோனா தொற்று நெருக்கடிக்கு மத்தியில் உயர்தர பரீட்சை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது.
அந்தவகையில் எதிர்வரும் மார்ச் மாதம் சாதாரண தர பரீட்சையை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் அதன் பெறுபேறுகளை எதிர்வரும் ஜுன் மாதமளவில் வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கின்னஸ் சாதனை படைக்கவுள்ள மரதன் ஓட்டத்தின் இலங்கைக்கான ஓட்டம் யாழ்ப்பாணத்தில்!
உடைமையில் கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் பண்ணாகத்தில் இளைஞன் கைது!
தனுஷ்கவுக்கு பிணை மறுப்பு - இலங்கை கிரிக்கெற் சபையும் அறிவிப்பொன்றை வெளியிட்டது!
|
|