உடுவில் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்ட 398 குடும்பங்களும் இரு வாரங்களுக்கு தனிமைப்படுத்தலில் இருப்பர் – சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் !

Monday, December 14th, 2020

“உடுவில் பிரதேச செயலகப் பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்ட 398 குடும்பங்கள் இரு வாரங்களுக்கு தனிமைப்படுத்தலில் இருப்பர்.

அதேவேளை, மருதனார்மடம் சந்தை மற்றும் அதனைச் சூழவுள்ள வர்த்தக நிலையங்கள் இரு வாரங்களுக்கு இயங்காது. அதேபோன்று தெல்லிப்பளை மற்றும் உடுவில் கோட்டப் பாடசாலைகள் இரண்டு வாரங்களுக்கு இயங்காது என வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மேலும் உடுவில் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதிகள் கொரோனா தனிமைப்படுத்தலில் இருந்து தளர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

உடுவில் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதிகள் கடந்த சனிக்கிழமை நள்ளிரவு முடக்கபடுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை உடுவில் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதிகள் முழுமையாக முடக்கப்பட்டு இருந்தன. எனினும் தற்போது இன்று திங்கட்கிழமைமுதல் முடக்கம் தளர்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: