ஈ.பி.டி.பியின் வலி கிழக்கு பிரதேச நிர்வாக செயலாளர் இராமநாதன் ஐங்கரன் அவர்களின் தந்தையார் பொன்னம்பலம் இராமநாதனுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் இறுதி மரியாதை!
Monday, May 2nd, 2016
நேற்றைய தினம் அமரத்துவம் அடைந்த ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் கோப்பாய் பகுதி நிர்வாக செயலாளரும் முன்னாள் வலிகாமம் கிழக்கு பிரதேச சபை எதிர்க்கட்சி தலைவருமான இராமநாதன் ஐங்கரனின் அன்புத் தந்தையார் பொன்னம்பலம் இராமநாதன் அவர்களது பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் முக்கியஸ்தர்கள் மலர்வளையம் மற்றும் மலர்மாலை சாத்தி தமது இறுதி அஞ்சலிகளைத் தெரிவித்துக் கொண்டனர்.
இன்றையதினம் சிறுப்பிட்டி தெற்கில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்திற்கு சென்ற ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ்.மாவட்டம், கிளிநொச்சி மாவட்டம் மற்றும் சர்வதேச முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டு தமது இறுதி அஞ்சலிகளை தெரிவித்துக்கொண்டதுடன் அன்னாரது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கும் தமது ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.










Related posts:
பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்களின் போராட்டம்!
பச்சிலைப்பள்ளி மேற்கில் வெடிபொருள்கள் அகற்றப்பட 225 ஏக்கர் விரைவில் விடுவிப்பு!
சதி முயற்சிகளை முறியடிப்பேன் - பிரதமர் மஹிந்த ராஜபக்ச சூளுரை!
|
|
|


