பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்களின் போராட்டம்!
Thursday, January 18th, 2018நாட்டின் அனைத்து பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் கல்வி சாரா ஊழியர்கள் எதிர்ப்பு நடவடிக்கை ஒன்றில் ஈடுபடவுள்ளனர்.
இவர்கள் இன்று மதிய போசனை வேளையின் போது சுமார் ஒரு மணித்தியால அடையாள எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளனர்.
இந்த எதிர்ப்பு நடவடிக்கைகள் வேதன பற்றாக்குறை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து முன்னெடுக்கப்டவுள்ளதாக இலங்கை பல்கலைக்கழகதொழிநுட்பவியலாளர்கள் சங்கத்தின் தலைவர் மங்கள தாபரே தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த எதிர்ப்பு நடவடிக்கைக்கு தொழிநுட்பவியல் உத்தியோகத்தர்கள் சங்கம் நிர்வாக சேவை சங்கம் நூலக மற்றும் தகவல் தொழிநுட்பஉதவியாளர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் ஆதரவளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
சாவகச்சேரிப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாகப் புதியவர் நியமனம் !
மோசடி நிறைந்த நிறுவனங்களை சீர் செய்வது அவசியமாகும் - ஜனாதிபதி
நாட்டில் 7 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா மரணங்கள் – வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுவோரது எண்ணிக்கையும் 5...
|
|