ஈ.பி.டி.பியின் ஆதரவுடன் 23 மேலதிக வாக்குகளால் வெற்றிபெற்றது யாழ் மாநகரின் பாதீடு !

Wednesday, January 27th, 2021

யாழ்.மாநகரசபையின் புதிய முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணனால் 2021 ஆம் ஆண்டுக்காக சபையில் முன்வைக்கப்பட்ட பாதீடு 23 மேலதிக வாக்குகளால் வெற்றி பெற்றுள்ளது.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஆதரவுடன் முதல்வர் மணிவண்ணன் தரப்பினரால் இன்றையதினம் குறித்த பாதீடு சபையில் முன்வைக்கப்பட்டது.

முன்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பிலான முன்னாள் முதல்வர் ஆர்னோல்டினால் முன்வைக்கப்பட்ட  யாழ்.மாநகரசபையின் 2021ஆம் ஆண்டுக்கான பாதீடு 2 தடவைகள் தோற்கடிக்கப்பட்ட நிலையில், மாநகர முதல்வர் பதவியை ஆனோல்ட் இழந்திருந்தார்.

இந்நிலையில் புதிய முதல்வராக தெரிவான முதல்வர் மணிவண்ணன் இன்றையதினம் 2021 ஆம் ஆண்டுக்கான புதிய பாதீட்டை சபையின் முன்வைத்திருந்தார்.

குறித்த பாதீடு தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் காங்கிரஸ் சார்ந்த 3 உறுப்பினர்கள் கடுமையான வாதப் பிரதிவாதங்களை முன்வைத்திருந்தனர்.

அதன்பின்னர் குறித்த பாதீடு வாக்கெடுப்புக்கு விடப்பட்ட நிலையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் 10 உறுப்பினர்கள், முதல்வர் மணிவண்ணன் தரப்பை சார்ந்த 10 உறுப்பினர்கள் ழுக்கியதேசிய கட்சியை சேர்ந்த 3 உறுப்பினர்கள் மற்றும் ஶ்ரீலங்கா சுதந்தரிக்கட்சி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகியவற்றின் தலா ஓர் உறுப்பினர்கள்  அடங்கலாக தமிழ்  27 வாக்குகள் ஆதரவாகவும், 3 வாக்குகள் எதிராகவும் வழங்கப்பட்டிருந்த நிலையில் 15 உறுப்பினர்கள் நடுநிலைமை வகித்தனர்.. இதையடுத்து குறித்த பாதிடு 23 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டு நடைமுறைப்படுத்த அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே முன்னாள் முதல்வர் இம்மானுவல் ஆர்னோல்ட் இன்றைய சபை அமர்வில் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Related posts: