ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியினால் சாவகச்சேரியில் இரத்ததானம் முகாம்!
Thursday, November 10th, 2016சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் இன்றையதினம் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் ஆதரவாளர்களால் இரத்ததானம் வழங்கப்பட்டுள்ளது.
ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் ஆதரவாளர்களால் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் பிறந்த தினத்தை முன்னிட்டு குறித்த இரத்ததானம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றுள்ளது. இதில் கட்சியின் ஆதரவாளர்கள் பலர் கலந்துகொண்டு குருதிக்கொடை செய்திருந்தனர்.
இதனிடையே ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் ஏற்பாட்டில் யாழ் போதனா வைத்தியசாலையிலும் இரத்ததான முகாம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு நூற்றுக்கணக்கான கட்சியின் அதரவாளர்கள் இரத்ததானம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மீன்பிடிக்க கடலுக்குச் சென்ற குடும்பஸ்தர் ஐந்து நாட்களின் பின் சடலமாக மீட்பு!
நாட்டு மக்களுக்கு மூன்றாவது தடுப்பூசி - இராணுவ தளபதி அறிவிப்பு!
ஒமிக்ரோன் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பூஸ்டர் தடுப்பூசி அவசியம் - ஸ்ரீஜெயவர்தனபுர பல்கலைக் கழகத்தின்...
|
|