வீதிகளை செப்பனிட்டு தருமாறு ஈழமக்கள் ஜனநாயக கட்சியிடம் திருமலை காந்திநகர் மக்கள் வேண்டுகோள்!
Friday, November 18th, 2016திருகோணமலை காந்திநகர் கிராமத்தில் வாழும் மக்களது அடிப்படைத்தேவைகள் மற்றும் நிலைமைகள் தொடர்பாக ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தவின் திருகோணமலை மாவட்டப் பிரதிநிதியான புஸ்ராசா நேரில் சென்று ஆராய்ந்தறிந்துகொண்டார்.
குறித்தபகுதி மக்கள் பல அசௌகரியங்களை எதிர்கொண்டுவருவதாக ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதை அடுத்து செயலாளர் நாயகத்தின் பணிப்பின்பேரில் திருமலை மாவட்ட கட்சியின் பிரதிநிதியாக புஸ்பராசா அப்பகுதி மக்களை நேற்றையதினம் நெரில் சென்று பார்வையிட்டதுடன் அப்பகுதி மக்கள் எதிரகொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாகவும் ஆராய்ந்தறிந்தகொண்டார்.
கடந்த 1996ம் ஆண்டு ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் ரூபா பத்துலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு குறித்த பகுதியில் அமைத்துக் கொடுக்கப்பட்ட கிராம அபிவிருதத்திச் சங்கம் மற்றும் சனசமூகநிலையம் ஆகிய கட்டடங்களையும் பார்வையிட்டார்.
இதன்போது குறித்த பகுதி மக்களால் வீதி அபிவிருத்தி மற்றும் ஆலய புனரமைப்பு போன்றவற்றை மேற்கொள்வதற்கு உதவிகளை பெற்றுத்தருமாறும் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
மக்களது கோரிக்கைகளை ஆராய்ந்தறிந்துகொண்ட புஸ்பராசா அவர்கள் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு குறித்த விடயத்தை கொண்டுசென்று தீர்வுகளை பெற்றுத்தருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுதருவதாக தெரிவித்திருந்தார்.
Related posts:
|
|