இ.போ.ச. ஊழியர்கள்  வவுனியாவில் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!

Saturday, February 4th, 2017

வவுனியா மத்திய பஸ் நிலையத்தை மீளவும் தங்களுக்கு வழங்குமாறு கோரிக்கையை முன்வைத்து இலங்கை போக்குவரத்துச்சபை ஊழியர்கள் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

இதன் ஒரு பகுதியாக வவுனியா இ.போ.ச சாலை ஊழியர்கள் இன்று காலை 11.00மணி தொடக்கம் சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

உரிய தீர்வு கிடைக்கவிடில் தற்போது வடமாகாண ரீதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள. எமது பணிப்பகிஷ்கரிப்பு இலங்கை முழுவதுமான பணிப்பகிஷ்கரிப்பாக மாற்றமடையும் என உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இ.போ.ச. வவுனியா சாலை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

unnamed__12_

unnamed__15_

unnamed__16_

unnamed__13_

Related posts: