இஸ்ரேல் – ஹமாஸ் மோதல்கள் தொடர்ந்தும் அதிகரித்தால் அதன் விளைவுகள் இலங்கையையும் தாக்கலாம் என பொருளாதார ஆய்வாளர்கள் எச்சரிக்கை!

Wednesday, October 11th, 2023

இஸ்ரேல் மீது ஹமாஸ் பஅமைப்பு ஆரம்பித்துள்ள போர் நடவடிக்கை இன்று 5 ஆவது நாளை எட்டியுள்ள நிலையில் குறித்த மோதல்கள் தொடர்ந்தும் அதிகரித்தால் அதன் விளைவுகள் இலங்கையையும் தாக்கலாம் என பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்நிலையில் இஸ்ரேல்- ஹமாஸ் போராளிகளுக்கு இடையேயான மோதலில் காணாமல் போன இலங்கை பெண்ணொருவர் உயிரிழந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

இந்நிலையில் குறித்த நெருக்கடியில் இலங்கையைச் சேர்ந்த இரண்டு பெண்களும், ஒரு ஆணும் காணாமல் போயுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் நேற்றுமுன்தினம் தெரிவித்தது.

இதேவேளை இஸ்ரேல் மற்றும் காசாவில் நடந்து வரும் தாக்குதல்கள் மத்திய கிழக்கு நாடுகளில் எண்ணெய் உற்பத்தியை சீர்குலைக்கும் என்ற கவலை எழுந்துள்ளதை அடுத்து உலக அளவில் எண்ணெய் விலைகள்  உயர்வடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் அமைதியின்மை காரணமாக, நாட்டின் ஏற்றுமதி துறை கடுமையாக பாதிக்கப்படலாம் என பேராதெனிய பல்கலைக்கழகத்தின் பொருளாதார துறையின் மூத்த பேராசிரியர் ஆனந்த விக்கிரம தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல், பலஸ்தீனம், லெபனான் உள்ளிட்ட மத்திய கிழக்கு பிராந்திய நாடுகளில் பல இலங்கையர்கள் வேலையில் இருப்பதனால், அந்த பிராந்தியத்தில் ஸ்திரமற்ற நிலை ஏற்பட்டால், இலங்கையர்கள் தொழில் வாய்ப்பை கூட இழக்க நேரிடும் என அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: