இளம் பிக்குகளின் மோசமான செயற்பாடு தொடர்பில் ஜனாதிபதி அதிருப்தி!
Saturday, August 12th, 2017
இளம் பிக்குமார்கள் சிலர் நடந்து கொள்ளும் விதத்தால் பிக்குகள் தொடர்பில் மக்களிடம் ஏற்படக்கூடிய தவறான எண்ணங்களைத் தவிர்க்க முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
மாத்தறை வெஹெரஹேன பூர்வாராம ரஜமகா விகாரையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பேரணிகளில் சில இளம் பிக்குமார்கள் நடந்து கொள்ளும் விதம் ஊடகங்களினூடாக உலகம் முழுவதும் காண்பிக்கப்படுவதனால் பிக்குகள் தொடர்பாக மக்களிடம் ஏற்படக்கூடிய தவறான எண்ணங்களைத் தவிர்க்க முடியாது.
எனவே, உன்னதமான பிக்குகள் சமூகத்தின் கௌரவத்தையும், நன்மதிப்பையும் பாதுகாக்கும் வகையில் செயற்பட வேண்டும் என ஜனாதிபதி கோரியுள்ளார்.
Related posts:
வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரேயைச் சந்தித்து கலந்துரையாடிய சுவீடன் வெளிவிவகார அமைச்சர் மார்கட் வோல்ஸ...
ஐக்கிய அரபு இராஜ்ஜியத்துக்கு பயணம் மேற்கொள்வதற்கு இலங்கை உள்ளிட்ட 15 நாடுகளுக்கு அனுமதி!
நகர அபிவிருத்தி அதிகார சபையினால் ஆரம்பிக்கப்பட்ட 11 அபிவிருத்தி திட்டங்களை துரிதமாக நிறைவேற்றுவதற்கு...
|
|
|


