இலங்கை வந்தடைந்தார் பான் கீ மூன்!

Wednesday, August 31st, 2016

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் இலங்கை வந்தடைந்துள்ளார்.

விஜயத்தின் போது பான் கீ மூன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட முக்கியஸ்தர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார்.  இதேவேளை எதிர்வரும் செப்டம்பர் 2ஆம் திகதி யாழ்ப்பாணத்துக்கு செல்லவுள்ள அவர் அங்குள்ள நலன்புரி முகாம்களிலுள்ள மக்களையும் சந்திக்கவுள்ளார்.

இதனைத் தொடர்ந்து மூன் லக்ஷ்மன் கதிர்காமர் மத்திய நிலையத்தில் விஷேட உரையாற்றவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts: