ஆழிப்பேரலையில் உயிர்நீத்த உறவுகளுக்கு  ஈழ மக்கள் ஜனநாயக கட்சி அஞ்சலி மரியாதை!

Tuesday, December 26th, 2017

சுனாமிப் பேரலையால் உயிரிழந்த உறவுகளின் நினைவேந்தல் நிகழ்வு பலநூறு உறவுகளின் கண்ணீருக்கு மத்தியில் உடுத்துறையில் நடைபெற்றது.

வடமராட்சி கிழக்கு உடுத்துறையில் இன்று காலை நடைபெற்ற குறித்த நினைவேந்தல் நிகழ்வில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் யாழ் மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் கலந்துகொண்டு ஆழிப்பேரலையில் உயிர் நீத்த உறவுகளுக்கு அஞ்சலி மரியாதை செலுத்தியுள்ளார்.

கடந்த 2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் திகதி ஏற்பட்ட கடல் கொந்தளிப்பில் உயிர்நீத்த உறவுகளுக்கு மலர் தூவி, தீபம் ஏற்றி அஞ்சலி உறவுகளைப் பிரிந்து துயரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள் அஞ்சலி செலுத்தினர்.

ஆழிப்பேரலை அனர்த்தம் ஏற்பட்டு இன்றுடன் 13 ஆண்டுகளாகும் நிலையில் இலங்கையின் பல இடங்களிலும் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

ஆர்ப்பாட்டங்கள் மூலம் அரசை கவிழ்த்துவிடலாம் என எவரும் கனவுகாண வேண்டாம் – நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச...
இலங்கைக்கு மேலும் 4 மில்லியன் சினோஃபார்ம் தடுப்பூசி – நாளை கிடைக்கும் என சீன தூதரகம் அறிவிப்பு!
அந்நியச் செலாவணியை விரைவாக ஈட்ட கைத்தொழில் துறைக்கு புதிய உத்திகள் வகுக்கப்பட வேண்டும் - ஜனாதிபதி கோ...