இலங்கை-சீன இடையே புதிய சகாப்தம் திறக்கப்படும்-ஜனாதிபதி!
Wednesday, February 8th, 2017
பண்டைய கடல்சார் பட்டுப்பாதை திட்டத்தை அடிப்படையாகக் கொண்ட அணை மற்றும் பாதை முயற்சியானது இலங்கை- சீன ஒத்துழைப்பில் புதிய சகாப்தம் ஒன்றைத் திறக்கும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
சீன- இலங்கை இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டு 60 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு சீன அதிபருக்கு அனுப்பி யுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
சீனாவுடனான உறவுகளை ஊக்குவிப்பதில் இலங்கை உறுதியான அர்ப்பணிப்பைக் கொண்டிருக்கிறது.இரண்டு நாடுகளும் 60 ஆண்டுகளுக்கு முன்னர் இராஜதந்திர உறவுகளை ஆரம்பித்தன. இந்த உறவு நிலையானதாக வளர்ச்சி பெற்று இப்போது மூலோபாய கூட்டாக உயர்ந்துள்ளது.” என்றும் ஜனாதிபதி தனது வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.
Related posts:
மீனவர் பிரச்சினை தொடர்பாக 3 மாதங்களுக்கு ஒரு தடவை கூடி ஆராய தீர்மானம்!
பலமான கடவுச்சீட்டு :முன்னிலையில் ஜேர்மன் - இலங்கைக்கு பின்னடைவு!
யாழ் மாநகர முதல்வர் மணிவண்ணன் சுய தனிமைப்படுத்தலில் – சயைின் இன்றைய விஷேட அமர்வும் இரத்து!
|
|