இலங்கை கடற்பரப்பில் 20 கப்பல்கள் மூழ்கியுள்ளன : ஆய்வில் அதிர்ச்சித் தகவல்!

கடந்த ஆண்டு இலங்கையின் மத்திய கலாச்சார நிதியத்தினால் நடத்தப்பட்ட புலனாய்வின் படி இலங்கை கடற்பரப்பில் 20 கப்பல்கள் மூழ்கியிருப்பதாகஅதிர்ச்சித் தகவல் வெளியிடப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு கூறியுள்ளது.
100 ஆண்டுகளை விட பழமையானது எனக் கருதப்படும் கப்பல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன் அவற்றில் பெரும்பாலானவை 25 மீற்றரை விடஆழமான பகுதியில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதில் சரக்குக் கப்பல்கள், நீராவிக் கப்பல் மற்றும் இயந்திரம் மூலம் இயங்கக் கூடிய படகுகளும் அடங்குவதாக மத்திய கலாச்சார நிதியம்கூறியுள்ளது.
மேலும் புலனாய்வு மூலம் கண்டெடுக்கப்பட்ட மதிப்புமிக்க தொல்பொருட்கள் காலி கோட்டையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள தொல்பொருள்அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
Related posts:
1.5 பில்லியன் டொலர் வழங்க சர்வதேச நாணய நிதியம் அனுமதி!
வைத்தியசாலை உணவகங்களில் ஆரோக்கியமான உணவ கட்டாயம் : இதனைத் தினமும் உறுதி செய்யுமாறு சுகாதார சேவைகள் ப...
கொரோனா வைரஸ்: இதுவரை 170 பேர் பலி !
|
|