இலங்கை கடற்பரப்பில் மூழ்கிய கப்பல்கள் விமானங்கள் தொடர்பான தரவுகளை பதிவேற்றம் செய்ய மத்திய கலாசார நிதியம் நடவடிக்கை!
Sunday, January 2nd, 2022இலங்கை கடற்பரப்பில் மூழ்கிய கப்பல்கள் மற்றும் விமானங்கள் தொடர்பான அனைத்து தரவுகளையும் பதிவேற்றம் செய்ய மத்திய கலாசார நிதியம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இவை தொடர்பான தகவல்களை WWW.CCF.GOV.LK இணையத்தளத்திற்கு சென்று பெற்றுக்கொள்ள முடியும் என அதன் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் காமினி ரணசிங்க தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில், இலங்கை கடற்பரப்பிற்குள் மூழ்கிய 101 கப்பல்கள் மற்றும் 6 விமானங்கள் தொடர்பான விரிவான தகவல்களை பொதுமக்கள் பெற முடியுமெனவும் அவர் கூறியுள்ளார்.
சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்வதற்காக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பேராசிரியர் காமினி ரணசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தன்னிறைவடைந்த பொருளாதாரமொன்றை கட்டியெழுப்புவதே ஜனாதிபதியின் எதிர்பார்ப்பு - அமைச்சர் பந்துல குணவர்தன...
2020 ஆம் ஆண்டு உயர்தர மாணவர்களுக்கான பல்கலைக்கழகப் பதிவு இன்றுமுதல் ஆரம்பம்!
குறுகிய அரசியல் நலன்களுக்காக உண்மையான தொழிற்சங்க தலைவர்கள் போராடுவது கிடையாது - பிரதமர் மஹிந்த ராஜப...
|
|