இலங்கை – ஈரான் கூட்டு ஒத்துழைப்பு நடவடிக்கை!
Monday, February 12th, 2018
இலங்கைக்கான இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள தூதுக்குழு இலங்கை மற்றும் ஈரானுக்கு இடையில் வர்த்தக மற்றும்பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளது.
இலங்கை அதிகாரிகளுடன் ஈரானின் எரிசக்திதுறையின் உயர்அதிகாரி ரசோல் தலைமையிலான குழுவினர் விரிவான பேச்சுவார்த்தைகளை நடத்திய பின்னர் இந்தஉடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர். இப்பேச்சுவார்த்தையின் போது இதற்குரிய திட்டங்களை துரிதமாக விரிவுபடுத்துவது குறித்தும் இலங்கைக்கும் ஈரானுக்கும் இடையில்சுகாதாரம் மற்றும் கலாச்சார துறைகளை பரிமாறிக்கொள்வது தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளது.
மேலும் இந்த நிகழ்வில் பிரதி வர்த்தக தொழிற்துறை அமைச்சர் மற்றும் ஏற்றுமதி துறையை சேர்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
Related posts:
கொரோனா தொற்றால் மோசடைந்து செல்கிறதா இலங்கையின் நிலைமை: இன்றும் அதிகமானோருக்கு நோய்த்தொற்று உறுதி !
அனைவரினது ஒத்துழைப்பும் இருந்தால் மக்களின் விருப்பங்களை திருப்திப்படுத்த முடியும் - ராஜாங்க அமைச்சர்...
அமெரிக்க டொலரின் விற்பனை பெறுமதி குறைவடைந்தது!
|
|