GMOA இனது தலைவரது வழக்கை விசாரிக்க நாள் நியமிப்பு!
Monday, May 22nd, 2017
நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் அனுருத்த பாதெனியவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரிக்க நாள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இதற்கமைய, ஆகஸ்ட் 2ம் திகதி குறித்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று(22) தீர்மானித்துள்ளது. பேராசிரியர்கள் சரத் விஜேசூரிய, காமினி வியன்கொட ஆகியோர் தாக்கல் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில், இன்று குற்றப்பத்திரிகை வாசிக்கப்பட்ட வேளையே வழக்கு விசாரணைக்கான தினமும் ஒதுக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
போதைப்பொருள் ஒழிப்பு - திறமைகளை வெளிக்காட்டிய அதிகாரிகளுக்கு சிறப்பு விருது!
ஒக்ரோபர் 15 ஆம் திகதிமுதல் பாடசாலைகளில் ஆரம்பப் பிரிவுகளை மீண்டும் முன்னெடுக்க முடியும் - கல்வி அமைச...
அஸ்வெசும இரண்டாம் கட்ட விண்ணப்பம் கோரல் மார்ச் 15 நிறைவு - சுமார் 250,000 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளத...
|
|
|


