இலங்கை – இந்தியாவுக்கு இடையில் புதிய விமான சேவைகள்!

Thursday, June 15th, 2017

ஜூலை மாதம் முதல் இந்தியாவுக்கான மேலும் மூன்று விமான சேவைகளை ஆரம்பிக்க ஶ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் தீர்மானித்துள்ளது.

இதன்படி விசாகப்பட்டனம், ஹைதராபாத் மற்றும் கோயம்புத்தூர் ஆகிய நகரங்களுக்கு முறையே ஜூலை 8, 12 மற்றும் 16ம் திகதிகளில் இந்த புதிய விமான சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது, ஶ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் மூலம் இந்தியாவின் சென்னை, திருவானந்தபுரம், திருச்சி, மும்பை, புது டில்லி, புத்தகயா, மதுரை, வாரணாசி, கொச்சி, பெங்கலூர் மற்றும் கல்கத்தா ஆகிய நகரங்களுக்கான விமானப் பயணங்கள் மேற்கொள்ளப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: