இலங்கையில் புதிய வீசா நடைமுறை!

Tuesday, March 5th, 2019

நாட்டில் முதலீட்டாளர்களுக்காக புதிய வீசா நடைமுறை ஒன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் 500,000 அமெரிக்க டொலரை முதலீடு செய்யும் முதலீட்டாளருக்கு 10 வருடங்களும், 300,000 அமெரிக்க டொலரை முதலீடு செய்யும் முதலீட்டாளருக்கு 5 வருடங்கள் இலங்கையில் தங்குவதற்கு வீசா வழங்கப்படவுள்ளது.

இலங்கை குடியுரிமையை கொண்டிராத வெளிநாட்டவர்களுக்கு குடிவரவு குடியகல்வு திணைக்களத்தினால் வழங்கப்படும் கால எல்லை வரை நிரந்தரமாக நாட்டில் தங்க அனுமதி வழங்கப்படவுள்ளது.

அதற்காக 1948 இன் 20ஆம் இலக்க குடிவரவு குடியகல்வு சட்டத்தின் 14(1) மற்றும் 14(2) ஆம் சரத்தினை திருத்தம் செய்வதற்கும், 14(3அ) என்ற சரத்து ஒன்றை புதிதாக உள்ளடக்குவதற்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றது.

புதிய நடைமுறை தொடர்பில் அமைச்சர் வஜிர அபேவர்தன சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

Related posts: