இலங்கையில் நிமோனியாவினால் பீடிக்கப்பட்ட 1000 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை – தேசிய தொற்று நோய் பிரிவின் விசேட வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம!

இலங்கையில் கோவிட் வைரஸினால் நிமோனியா காய்ச்சலுக்கு உள்ளான ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருவதாக தேசிய தொற்று நோய் பிரிவின் விசேட வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார்.
அத்துடன் இலங்கை தற்போதுவரையில் மிகவும் அவதானமிக்க மற்றும் தீர்மானமிக்க நிலையில் உள்ளதாக வைத்தியர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சந்தர்ப்பத்தில் கோவிட்டை கட்டுப்படுத்துவதற்கு எடுக்க கூடிய அனைத்து நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால் எதிர்வரும் மூன்று அல்லது நான்கு வாரத்தில் மிகவும் மோசமான நிலைமை ஏற்பட கூடும் என அவர் எச்சரித்துள்ளார்.
இதேவேளை கோவிட் நிமோனியா ஏற்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை குறைவு என்ற போதிலும் வேறு நோய்கள் இருக்கும் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் உயிரிழக்கும் ஆபத்துக்கள் அதிகம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதனடிப்படையில் மக்கள் சுகாதார வழிமுறைகளை இறுக்கமாக கடைப்படித்து. மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|