இலங்கையில் நகர்ப்புற மக்கள் தொகை 44.57 வீதமாக அதிகரித்துள்ளதாக தேசிய பௌதீக திட்டமிடல் திணைக்களம் தகவல்!
Wednesday, October 18th, 2023இலங்கையில் நகர்ப்புற மக்கள் தொகை 44.57% ஆக அதிகரித்துள்ளதாக தேசிய பௌதீக திட்டமிடல் திணைக்களத்தினால் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
இந்த அறிக்கையை நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவிடம் நேற்று (17) பாராளுமன்றத்தில் கையளிக்க திணைக்களம் ஏற்பாடு செய்திருந்தது.
ஆய்வு அறிக்கை எதிர்காலத்தில் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட உள்ளது.
நாட்டின் நகரமயமாக்கலைப் பொறுத்தவரை, கடைசியாக 2012 இல் மக்கள் தொகை மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது, அதன்படி, நாட்டின் நகரமயமாக்கல் 18.2% ஆக பதிவு செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
அமைச்சரவைக் கூட்டத்தை பகிஸ்கரிக்கத் தீர்மானம்!
மாணவர்களுக்கு சுகாதார வசதிகளை செய்து கொடுங்கள் - இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை!
வழக்குகளை விரைவாக தீர்ப்பதற்கு வசதியாக குற்றவியல் சட்டத்தில் முன்விசாரணை முறையை அறிமுகப்படுத்த நடவடி...
|
|