ஜகத் ஜயசூரியவிற்கு எதிராக யுத்தக் குற்றச்சாட்டு!

Friday, September 1st, 2017

முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரியவிற்கு எதிராக பிரேசிலில் யுத்தக் குற்றச் செயல் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறித்து உன்னிப்பாக அவதானிக்குமாறு உத்தரவிடப் போவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

யுத்தக் குற்றச்சாட்டுகளில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக ஜகத் ஜயசூரிய பிரேசிலில் இருந்து நாடு திரும்பவில்லை.மாறாக அவருக்கான பதவிக்காலம் நிறைவடைந்த நிலையிலேயே ஜகத் ஜயசூரிய நாடு திரும்பியுள்ளார்.எவ்வாறாயினும், இந்த விடயம் தொடர்பில் உன்னிப்பாக அவதானிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் உத்தரவிடப் போவதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

Related posts: