இலங்கையில் சிறுவர் வன்முறை அதிகரிப்பு : 64,000 முறைப்பாடுகள் பதிவு!
Thursday, August 2nd, 2018சிறுவர் வன்முறைகள் தொடர்பிலான முறைப்பாடுகள் கொழும்பு மாவட்டத்தில் இருந்தே அதிகமாக பதிவாகியுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இந்த முறைப்பாடுகள் பதிவாகும் மாவட்டங்களில் 2 ஆவது இடத்தில் கம்பஹாவும் 3ஆவது இடத்தில் குருநாகலும் உள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர், சட்டத்தரணி எச்.எம். அபேரத்ன தெரிவித்துள்ளார்.
சிறுவர் துஷ்பிரயோகம், சிறுவர்களைத் தாக்குதல், பாலியல் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் மட்டும் 64,000 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகவும் குறித்த முறைப்பாடுகள் தொடர்பில் ஆராய்வதற்கான குழுவில் ஆளணிப் பற்றாக்குறை காணப்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
மாணவர் கடன் திட்டத்திற்கான கால அவகாசம் நீடிப்பு!
தொழில்நுட்ப கல்வி திறனை விருத்தி செய்ய விசேட திட்டம்!
கோர விபத்து: 40 பேருக்கும் அதிகமானோர் வைத்தியசாலையில்!
|
|