இலங்கையின் பல இடங்களிலும் இன்று பலத்த மழை பெய்யும் வாய்ப்பு!
Thursday, September 16th, 2021இலங்கையின் இன்றைய வானிலையில், சப்ரகமுவ மற்றும் மேற்கு மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன் சில இடங்களில் 50 மில்லிமீட்டர் அளவுக்கு பலத்த மழை பெய்யும் என்று வானிலை மையம் எதிர்வுகூறியுள்ளது.
வடமேல் மாகாணத்தில் பல இடங்களில் மழை பெய்யும். ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாலை அல்லது இரவில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
வடக்கு மற்றும் வட-மத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் 40 முதல் 50கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
00
Related posts:
நீரிழிவு நோயை கட்டுப்படுத்தல் தொடர்பில் யாழ்ப்பாணத்தில் பேரணி!
அனைத்து மக்களினதும் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் வரவு செலவுத்திட்டம் அமையும் - இராஜாங்க அமைச்சர்...
அந்நியச் செலாவணியை விரைவாக ஈட்ட கைத்தொழில் துறைக்கு புதிய உத்திகள் வகுக்கப்பட வேண்டும் - ஜனாதிபதி கோ...
|
|