பேஸ்புக் தொடர்பில் விசேட செய்தி.!

Saturday, June 22nd, 2019

வெறுப்புணர்வை ஏற்படுத்தக்கூடிய கருத்துகளை பரப்பும் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதில் சிறந்த முறையில் தொழில்படும் முயற்சியை பேஸ்புக் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கின் இந்த நடவடிக்கைகள் தற்போது இலங்கை மற்றும் மியன்மார் ஆகிய நாடுகளில் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

வெறுப்புணர்வைத் தூண்டும் வகையிலான செய்திகள் சென்றடைபவர்களின் எண்ணிக்கையினை 5 ஆக பேஸ்புக் மட்டுப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்த வருட ஆரம்பத்தில வட்ஸ் அப் சமூக வலைதளம் செய்தி பரிமாற்றலை மட்டுப்படுத்தியுள்ளது.

ஏனைய நாடுகளில் 20 பாவனையாளர்களுடன் தொடர்பை ஏற்படுத்தலாம் என்ற நிலையில், இந்தியாவில் ஆக கூடியது 4 பேருக்கு மட்டுமே இந்தக் சேவை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts: