இலங்கையின் சனத்தொகை ஒரு இலட்சத்து நாற்பத்து நான்காயிரத்தினால் வீழ்ச்சி!

கடந்த ஆண்டு இலங்கையின் சனத்தொகை ஒரு இலட்சத்து நாற்பத்து நான்காயிரத்தினால் குறைந்துள்ளது.
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளியல் மற்றும் புள்ளிவிபரவியல் துறையின் பேராசிரியர் வசந்த அத்துகோரல இதனை தெரிவித்துள்ளார்.
பதிவாளர் நாயகம் திணைக்களம் வெளியிட்டுள்ள அண்மைய அறிக்கை மூலம் இதனை அவதானிக்க முடிவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
10 ஆண்டுகளுக்குப் பிறகு மக்கள் தொகை எதிர்மறையான வளர்ச்சியைக் காட்டுவது இதுவே முதல் தடவை எனவும் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளியல் மற்றும் புள்ளிவிபரவியல் துறையின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
1,141,000 பேர் கடந்த 8 மாதங்களில் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர்!
ஹெரோயின் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட இருவர் கைது!
மீண்டும் இருளில் மூழ்கப்போகும் இலங்கை - மின்சார சபை பொறியிலாளர்கள் சங்கம் !
|
|