இலங்கையர்கள் உள்ளிட்ட 26 கடற்படை வீரர்கள் யேமன் கிளர்ச்சியாளர்களினால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர்!

Tuesday, December 20th, 2016

இலங்கையர்கள் உள்ளிட்ட 26 கடற்படை வீரர்கள் யேமன் கிளர்ச்சியாளர்களினால் கடந்த 3 மாதங்களாக சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர்  என செய்திகள் வெளியாகியுள்ளன.

கீறீஸ் கப்பல் நிறுவனத்திற்கு சொந்தமான பெயார் அப்பலோன் என்ற கப்பலொன்றில் பணியாற்றியவர்களே கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கின்றனர். இவர்களில் ஒன்பது இலங்கையர்கள் அடங்குகின்றனர்.

குறித்த கப்பல் யேமனின் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டுக்குள் காணப்படும் அல் ஹுடைடா கடற்பிராந்தியத்தில் நங்கூரமிடப்பட்டுள்ளது. இந்த கப்பலை விடுவித்துக் கொண்வதற்கான கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக கப்பல்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

yeman

Related posts: