இலங்கைக்கு மேலும் 4 மில்லியன் சினோஃபார்ம் தடுப்பூசி – நாளை கிடைக்கும் என சீன தூதரகம் அறிவிப்பு!

Friday, September 3rd, 2021

இலங்கைக்கு மேலும் 4 மில்லியன் சினோஃபார்ம் தடுப்பூசி தொகுதி நாளை சனிக்கிழமை 4 ஆம் திகதி கிடைக்கும் என கொழும்பிலுள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.

தூதரகத்தின் தகவலின் படி, ஒரே நாளில் சினோஃபார்ம் வழங்கிய தடுப்பூசிகளின் மிகப்பெரிய தொகுதி இதுவாகும்.

இந்த தடுப்பூசிகள் கிடைத்தவுடன், இலங்கைக்கு வழங்கிய சினோஃபார்ம் தடுப்பூசியின் மொத்த தொகை 22 மில்லியன் அளவுகளாக அதிகரிக்கும் என்றும் அது கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: