தங்கம் கடத்திய இருவர் சென்னையில் கைது!

Saturday, April 23rd, 2016

இலங்கையிலிருந்து தங்கங்களை கடத்தி சென்ற இரண்டு பேரை சென்னையில் வைத்து தமிழக வருவாய்துறை புலனாய்வு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

கடல்மார்க்கமாக கடத்தப்பட்ட 3.4 கிலோ கிராம் எடைக் கொண்ட தங்கம் அவர்களிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளது. இவை ஒரு கோடியே மூன்று லட்சம் இந்திய ரூபா பெறுமதியானவை என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது

இதேவேளை, கொழும்பின் ஊடாக சிங்கப்பூருக்கு 34 லட்சத்து 89 ஆயிரம் இந்திய நாணயங்களை கடத்திய மேலும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related posts: