இலங்கைக்கு கடன் நீடிப்பு வழங்கப்பட்டுள்ளதை உறுதிபடுத்தியது சீனாவின் வெளிவிவகார அமைச்சு !
 Thursday, January 26th, 2023
        
                    Thursday, January 26th, 2023
            
சீனாவின் ஏற்றுமதி – இறக்குமதி வங்கியான எக்ஸிம் வங்கி, இலங்கைக்கு கடன் நீடிப்பு வழங்கப்பட்டுள்ளதை சீனாவின் வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
முன்னதாக இந்த நிதியுதவி குறித்து தகவல்கள் வெளியாகியிருந்தபோதும், சீனாவின் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை.
இந்தநிலையில், இலங்கைக்கு இரண்டு வருட கால அவகாசத்தை வழங்கியதுடன், சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 2.9 பில்லியன் டொலர் கடனைப் பெறுவதற்கான நாட்டின் முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதாக,சீன வெளிவிவகார அமைச்சு கூறியதாக ரொய்ட்டர்ஸிடம் தெரிவித்துள்ளது.
அத்துடன் சிரமங்களையும் சவால்களையும் எதிர்கொள்வதால், இலங்கையின் சமூக-பொருளாதார வளர்ச்சிக்கு தங்களால் இயன்ற உதவிகளை சீனா செய்து வருகிறது என்றும் சீன வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
000
Related posts:
கச்சதீவை மீண்டும் உரிமைகோரும் எதிர்பார்ப்பும் இந்தியாவுக்கு இல்லை யாழ்.வருகை தந்த இந்திய வெளிவிவகாரச...
கம்பரலிய திட்டத்தில் மோசடி: வடமராட்சி மக்கள் ஆதங்கம்!
டெங்கு நோயை ஒழிக்க நடவடிக்கை!
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        