இலங்கைக்கான இத்தாலிய தூதுவர் – பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் சந்திப்பு – சட்டவிரோத குடியேற்றவாசிகளை கட்டுப்படுத்துவது குறித்து ஆராய்வு!

Friday, September 22nd, 2023

இலங்கைக்கான இத்தாலிய தூதுவர்.டாமியானோ பிரான்கோவிஹ் அவர்கள் பொது பாதுகாப்பு அமைச்சுசில் பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் அவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடியுயுள்ளார்.

இந்த கலந்துரையாடலில் இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையிலான இருதரப்பு இராஜதந்திர உறவுகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன் இலங்கையின் தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

இரு நாடுகளுக்குமிடையிலான சட்டவிரோத குடியேற்றவாசிகள் மற்றும் போதைப்பொருள் கடத்தலை கட்டுப்படுத்த பொது பாதுகாப்பு அமைச்சு மற்றும் இத்தாலியின் உள்துறை அமைச்சகம் மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

பொது பாதுகாப்பு அமைச்சர் திரு.திரான் அலஸ் மற்றும் திரு.டாமியானோ பிராங்கோவிஹ் ஆகியோரும் இத்தாலியில் வாழும் இலங்கையர்களின் தேவைகள் குறித்து கவனம் செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: