இராணுவத்தில் 10 புதிய மேஜர் ஜெனரல்கள்!
Thursday, May 23rd, 2019இராணுவத்தைச் சேர்ந்த 10 பிரிகேடியர் தர அதிகாரிகள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், மேஜர் ஜெனரல்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.
பிரிகேடியர் கேஎம்ஆர்பி. கருணாதிலக, பிரிகேடியர் ஐஓடபிள்யூ. மடோல, பிரிகேடியர், பி.ஜே.கமகே, பிரிகேடியர் எச்பிஎன்கே. ஜெயபத்திரன, பிரிகேடியர் ஆர்கேபிஎஸ். கெற்றகும்புர, பிரிகேடியர் ஏஎஸ். ஆரியசிங்க, பிரிகேடியர் டபிள்யூடிசிகே. கோஸ்தா, பிரிகேடியர் பிஐ.பத்திரன, பிரிகேடியர் ஜிஎச்ஏஎஸ். பண்டார, பிரிகேடியர் பிபிஎஸ் டி சில்வா ஆகியே அதிகாரிகளே பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.
2019 மே 10ஆம் நாளில் இருந்து நடைமுறைக்கு வரும் வகையில் இவர்களுக்கு மேஜர் ஜெனரலாகப் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டில் இராணுவத்தின் மூத்த அதிகாரிகளான மேஜர் ஜெனரல்கள் பலர் ஓய்வு பெற்றுள்ள நிலையிலேயே புதிதாக 10 மேஜர் ஜெனரல்கள் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.
Related posts:
எண்ணெய் விலை வீழ்ச்சி!
மகள் படுகொலை - தந்தைக்கு தூக்கு!
மன்னார் கடற்பரப்பில் 323 கிலோ கிராம் புகையிலை மீட்பு!
|
|