இரஸ்ரேல் -ஹமாஸ் போர் தொடர்பில் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்படும் – சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவிப்பு!

Wednesday, October 18th, 2023

இரஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இயக்கத்துக்கு இடையில் இடம்பெற்றுவரும் போர் தொடர்பில் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்படும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்..

நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே இந்த விவகாரம் தொடர்பில் விவாதம் நடத்தப்படுமென சபாநாயகர் பதிலளித்துள்ளார்.

முன்பதாக நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர், – இஸ்ரேல் – பாலஸ்தீனத்துக்கு இடையிலான போரில் தீவிரவாதிகளாலும் மக்கள் கொல்லப்படுவதுடன், அரச பயங்கரவாதத்தாலும் மக்கள் கொல்லப்படுகின்றனர். இதனால் எதிர்வரும் வெள்ளிக்கிழமை இந்த விவகாரம் தொடர்பில் பாராளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் கோரிக்கை விடுத்திருந்தார்.

அதேபோன்று நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர், நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில ஆகியோரும் இந்த விவகாரம் தொடர்பில் நாடாளுமன்றில் விவாதம் நடத்தப்பட வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.

விவாதம் நடத்துவதன் ஊடாக போர் காரணமாக இலங்கைக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைக்க அரசாங்கம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சபைக்கு அறிவிக்க முடியும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பலரது கோரிக்கையின் பிரகாரம் சபையில் இதுகுறித்து விவாதம் நடத்தப்படுமென சபாநாயகர் அறிவித்துள்ளார்.

இன்றையதினம் இடம்பெறும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இதற்கான தினம் தீர்மானிக்கப்படும் என்றும் சபாநாயகர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: