இரண்டு மாதங்களுக்குள் மாணவர்களுக்கான காப்பீடு!

Tuesday, July 4th, 2017

பாடசாலை மாணவர்களுக்கான காப்பீட்டை அடுத்துவரும் இரண்டு மாதங்களுக்குள் நடைமுறைப்படுத்தவுள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

சுகததாச மைதானத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அமைச்சர் இதனை தெரிவித்தார்

தனியார் மற்றும் அரச பாடசலைகளில் கல்வி கற்கும் அனைத்து மாணவர்களுக்கும் இந்த காப்பீடு திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.இதற்கமைய நோய்வாய்ப்படுகின்ற மாணவர்களுக்கு இரண்டு லட்சம் ரூபாய் காப்பீட்டுத் தொகை ஒன்று வழங்கப்படவுள்ளது

இதற்கான அறக்கட்டளை ஒன்றை விரைவில் நிறுவுவதற்கு திட்டமிட்டுள்ளது

காப்பீட்டு கட்டண கொடுப்பனவின் மூலம் பெறப்படுகின்ற தரகு கொடுப்னவை அறக்கட்டளைக்கு உள்வாங்கி அதனை மாணவர்களுக்கான விசேட சிகிச்சை போன்ற விடயங்களுக்கு மேலதிக கொடுப்பனவாக வழங்கப்படும் என கல்வி அமைச்சர் குறிப்பிட்டார்

Related posts: