இன்று நள்ளிரவு 12 மணிமுதல் மண்ணெண்ணெய் விலை 50 ரூபாவால் குறைப்பு – கனிய எண்ணெய் கூட்டுத்தாபனம் அறிவிப்பு!
Wednesday, March 1st, 2023இன்று நள்ளிரவு 12 மணிமுதல் மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 50 ரூபாவால் குறைக்கபடவுள்ளதாக கனிய எண்ணெய் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
முன்பதாக மண்ணெண்ணெய் விலைகளை குறைக்கும் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்மொழிவுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனுமதி வழங்கியிரந்தார்..
இதன்படி மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் புதிய விலை 305 ரூபாவாகும் என அந்த கூட்டுத்தாபனம் குறிப்பிட்டுள்ளது.
ஏனைய எரிபொருட்களின் விலைகளில் எந்தவித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என கனிய எண்ணெய்க் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன், தொழிற்துறைக்குப் பயன்படுத்தும் மண்ணெண்ணெய் விலை 134 ரூபாவினால் (புதிய விலை 330 ரூபா) குறைக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஜனாதிபதியை சந்திக்கும் தேசிய சம்பள ஆணைக்குழு உறுப்பினர்கள் !
தீவிரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடைய 11 இஸ்லாமிய அமைப்புகளை தடைசெய்ய சட்டமா அதிபர் அங்கீகாரம்!
உள்ளுராட்சி மன்றங்களை ஒன்றிணைத்து சேதனப் பசளையை உற்பத்தி செய்ய நடவடிக்கை - இராஜாங்க அமைச்சர் ரொஷான் ...
|
|