இன்று ஜனாதிபதி கிளிநொச்சி விஜயம்!
Monday, June 18th, 2018ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்றைய தினம் கிளிநொச்சிக்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.
ஜனாதிபதி தலைமையில் ‘சிறுவர்களைப் பாதுகாப்போம்’ தேசிய செயற்திட்டத்தின் கிளிநொச்சி மாவட்ட மாநாடு இன்று கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
நாட்டின் உயிர்நாடிகளான சிறுவர்களைப் பாதுகாத்து, அவர்களது உடல், உள விருத்திக்கு ஏற்ப சமூகத்தில் அவர்கள் பாதுகாப்பாக வாழ்வதற்கான சிறந்த சூழலை உருவாக்குவதே இதன் நோக்கமாகும்.
துஷ்பிரயோகங்களைத் தடுத்தல், பாதுகாப்பை உறுதி செய்தல், சுகாதார போசணை, ஆளுமை விருத்தி, கல்வி மற்றும் வாழ்க்கைத் திறனை மேம்படுத்தல் ஆகிய துறைகளினூடாக நாடளாவிய ரீதியில் இந்த செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
Related posts:
அடுத்த வருடம் முதல் தகவலறியும் உரிமைச் சட்டம் அமுல்!
நான்காவது கொள்முதல் மாநாடு ஜனாதிபதியின் தலைமையில் ஆரம்பம்!
வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் - கனமழைக்கும் வாய்ப்புள்ளதென புவியியற்றுறை மூத்த விரிவுரையாளர் நாகமு...
|
|