இன்று சர்வதேச மலேரியா தினம்!

Wednesday, April 25th, 2018

உலகலாவிய ரீதியில் சர்வதேச மலேரியா நோய் தினம் ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகின்றது.

இந்த வருடத்திற்கான இதன் தொனிப்பொருள் மலேரியா நோயை இல்லாதொழிக்க தயாராகவுள்ளோம் என்பதாகும்.

இலங்கை ஏற்கனவே மலேரியா நோயை இல்லாதொழிப்பதில் வெற்றி கண்டுள்ளது. இதனால் இந்த வருடம் இலங்கையை மலேரியா நோயற்ற நாடாக வைத்துக்கொள்ளுங்கள் என்பதே தொனிப்பொருளாகஅமைந்துள்ளது.

உலகின் சுமார் 100 நாடுகளில் மலேரியா நோய் காணப்படுகிறது. இதனால் இந்த நாடுகளுக்கு செல்லும் இலங்கையர்கள் மலேரியா தொடர்பில் முழுமையான சிகிச்சையைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென்று சமூகசுகாதார விசேட வைத்தியர் டொக்டர் திருமதி தேவனீ ரணவீர தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் இந்த நாடுகளுக்குச் சென்று நாடு திரும்பும்போது இரத்தப் பரிசோனையை மேற்கொள்வது கட்டாயமாகும்

மலேரியா நோய் ஏற்பட்டால் முழுமையான சிகிச்சைக்கு அல்லது அதன் பின்னரான சிகிச்சை தொடர்பில் தேவையான ஆலோசனைகள் அல்லது உதவிகளைப் பெற்றுக் கொள்வதற்கு 0117-626626  என்றதொலைபேசி இலக்கம் மூலம் தொடர்பு கொண்டு தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.

இதேபோன்று இவ்வாறான நபர்கள் ஒரு வருடத்திற்குள் காய்ச்சால் பாதிக்கப்பட்டால் மலேரியா நோய் தொடர்பில் அவசியம் கவனம் செலுத்த வேண்டுமென்றும் சமூக சுகாதார விசேட வைத்தியர் டொக்டர் திருமதிதேவனீ ரணவீர குறிப்பிட்டுள்ளார்.

2012ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து இலங்கை மலேரியா நோயற்ற நாடு என்று உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Related posts: