இன்று இரவுமுதல் மின் உற்பத்தி நிலையங்களுக்கு தேவையான எண்ணெய் வழங்கப்படும் – எரிசக்தி அமைச்சு அறிவிப்பு!
Wednesday, March 9th, 2022இன்றிரவு (09) முதல் மின் உற்பத்தி நிலையங்களுக்கு தேவையான எண்ணெய் வழங்கப்படும் என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டை வந்தடைந்துள்ள கப்பலிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் நடவடிக்கைகள் இன்று (09) காலை ஆரம்பமாகவுள்ளதாக எரிசக்தி அமைச்சின் செயலாளர் கே.டி.ஆர். ஒல்கா தெரிவித்துள்ளார்.
கொழும்பு துறைமுகத்திலுள்ள மிதக்கும் மின் உற்பத்தி நிலையத்திற்கு இன்று பகல் வேளையில் எண்ணெய் வழங்கப்படவுள்ளது.
நாட்டை வந்தடைந்துள்ள டீசலை ஏற்றிய 02 கப்பல்களில், ஒரு கப்பலிலிருந்து டீசலை இறக்கும் செயற்பாடுகள் இன்று காலை நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சின் செயலாளர் கே.டி.ஆர். ஒல்கா மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை 38,000 மெட்ரிக் தொன் டீசலை ஏற்றிய மற்றுமொரு கப்பலும் நாட்டை வந்தடைந்துள்ளதுடன், அதற்கான கொடுப்பனவு இன்று வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இயக்கச்சியில் குண்டு வெடிப்பு - ஒருவர் படுகாயம் - வெடிகுண்டு தயாரிப்பு முயற்சி என சந்தேம்!
இரட்டைக் குடியுரிமை உடைய நாடாளுமன்ற உறுப்பினாகள் பதவி விலக வேண்டும் - சபையில் நாடாளுமன்ற உறுப்பினர் ...
விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க 11 பில்லியன் ரூபா ஒதுக்கீடு - விவசாய அமைச்சு தெரிவிப்பு!
|
|
வெளிநாட்டு நிறுவனங்களுடன் பங்காளியாக இயற்கை எரிவாயுக்கான நிறுவனம் இலங்கையில் அமைக்கப்படும் - அமைச்ச...
இயற்கை அனர்த்தங்களுக்கு உட்படுவோர் ஆதாரத்தை கிராமசேவை அதிகாரிகளுக்கு சமர்ப்பித்தால் 10,000 ரூபா முதல...
ஜனாதிபதிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த உள்ளக தகவல்கள் கசிவு - விசாரணைகளை ஆரம்பிக்குமாறு பொது...