இன்றுமுதல் முச்சக்கர வண்டிகள் மின்சார முச்சக்கர வண்டிகளாக பரிணாமம் – மோட்டார் போக்குவரத்து ஆணைக்குழு நடவடிக்கை!
Thursday, May 11th, 2023நாட்டில் தற்போதுள்ள முச்சக்கர வண்டிகளை மின்சார முச்சக்கர வண்டிகளாக மாற்றும் திட்டம் இன்று வியாழக்கிழமைமுதல் அமுல்படுத்தப்படும் என மோட்டார் போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி, முதற்கட்டமாக 300 பெட்ரோல் முச்சக்கர வண்டிகள் மின்சார முச்சக்கர வண்டிகளாக மாற்றப்படவுள்ளதாக ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டில் எரிபொருள் தேவை அதிகரிப்பை கட்டுப்படுத்தும் நோக்கில் இலங்கை அரசாங்கம் பல்வேறு பொறிமுறைகளை உள்வாங்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.
இதன் ஒரு கட்டமாகவே குறித்த முச்சக்கர வண்டிகளை மின்சார முச்சக்கர வண்டிகளாக மாற்றும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
ஆகஸ்ட் 2 முதல் உயர்தர பரீட்சைக் கருத்தரங்குகளுக்கு தடை!
முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு புதிய இலட்சினை!
இன்றுமுதல் ஒரு இறாத்தல் பாணின் விலை பத்து ரூபாய் குறைக்கப்பட்டது - யாழ்ப்பாண மாவட்ட கூட்டுறவு வெதுப்...
|
|