இனியொருதடவை மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அற்ப சலுகைகளுக்கு விலைபோக மாட்டார்கள் – தோழர் ஜீவன்!
Sunday, November 26th, 2017இனியொருதடவை தமிழ் மக்கள் அற்ப சலுகைகளுக்கும் உணர்ச்சிப் பேச்சுக்களுக்கும் இடங்கொடுத்து தமது வாக்குகளை வழங்கி தங்களது தலையில் தாங்களே மண்ணை அள்ளிக் கொட்ட தயாராக இருக்கமாட்டார்கள் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
நல்லூர் பிரதேச கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்ற குறித்த பிரதேச கட்சியின் முக்கியஸ்தர்களுடன் உள்ளூராட்சி மன்ற தேர்தல் மற்றும் கட்சியின் அது தொடர்பான கலந்தரையாடுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கட்சியின் நல்லூர் பிரதேச நிர்வாக செயலாளர் அம்பலம் இரவீந்திரதாசன் தலைமையில் நடைபெற்ற குறித்த சந்திப்பில் அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றிய சிவகுரு பாலகிருஸ்ணன் மேலும் தெரிவிக்கையில் –
கடந்தகாலங்களை போல தமிழ் மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் உணர்ச்சி கதைகளுக்கும் உசுப்பேற்றுதல்களுக்கம் தமது வாக்குகளை இம்முறை கொடுக்கமாட்டார்கள். இம்முறை தமிழ் மக்கள் நன்கு தெளிவாகவே உள்ளனர்
கடந்த காலத்தில் தேசியம் பேசி தமிழ் மக்களின் வாழ்க்கைமுறைமைகளை சீரழித்த தமிழ் தேசிய கூட்டமைப்பினரது கபடத்தனங்கள் மக்கள் மத்தியில் இன்று வெளிப்பட்டுள்ளன.
எமது கட்சியும் அதன் செயலாளர் நாயகமும் மக்களுக்கு அன்றுதொட்டு இன்றுவரை மேற்கொண்டுவரும் மக்கள் பெரும்பணிகள் யாவும் இன்று மக்களால் புடம்போட்டு பார்க்கப்படுகின்றன. இதனால் இன்று தமிழ் மக்களுக்கு யார் அதிகாரத்தில் இருந்தால் தமது வாழ்வியல் வளம்பெறும் என்ற தெளிவு ஏற்பட்டுள்ளது.
ஆகவே நாம் இம்முறை தமிழ் மக்களின் நம்பிக்கைக்குரியவர்களாக மக்கள் மத்தியில் சேவை செய்ய அதிகரித்த பலத்தை மக்கள் தருவார்கள். இதில் எவ்வித மாற்றமம் கிடையாது. எனவே நாம் ஒருமித்தவர்களாக மக்களுடன் இணைந்து எமத தேசங்களை கட்டியெழுப்பவோம் என்றார்.
இதன்போது குறித்த பகுதி வட்டாரங்களின் அரசியல் நிலைப்பாடுகள் தொடர்பாகவும் தேர்தலை முன்னிட்டு கட்சியால் முன்னெடுக்கப்படவுள்ள செயற்றிட்டங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
Related posts:
|
|