இந்துக் கல்லூரி மாணவன் மின்சாரம் தாக்கி பலி!
Thursday, April 6th, 2023யாழ்ப்பாணம் கொக்குவிலில் 17 வயது மாணவன் ஒருவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
கொக்குவில் இந்துக் கல்லூரியில் உயர்தரம் பயின்று வரும் கொக்குவில் குளப்பிட்டியைச் சேர்ந்த மோகனதாஸ் கிஷோத்மன் என்ற (17 வயது) மாணவனே மின்னழுத்தியினை மின்பிறப்பாக்கியுடன் இணைக்க முற்பட்ட வேளை மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்த மாணவனின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
குறித்த மாணவனுக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாமெனவும் சந்தேகிக்கப்படுகிறது. உயிரிழப்பு தொடர்பில் கோப்பாய் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பாரிய மின்சக்தி நெருக்கடி ஏற்படக்கூடும் - ஒன்றிணைந்த எதிர்கட்சி!
சேனா பூச்சியினை கட்டுப்படுத்துவது தொடர்பான அறிக்கை!
தனிமைப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளை முடித்த 228 பேர் வீடுதிரும்பினர்!
|
|
2021 ஆம் ஆண்டுமுதல் ஐரோப்பிய ஒன்றிய GSP + இன் அதே நன்மைகளை இலங்கை பெறும் - பிரித்தானியாவின் சர்வதேச ...
தடுப்பூசி செலுத்திக்கொள்ள இளைஞர்கள் தயக்கம் - அனைவரும் விரைவில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் எ...
எதிர்வரும் இரண்டு வருடங்களில் வைத்தியர்கள் உள்ளிட்ட அரச வைத்தியசாலைகளின் பிரச்சினைகள் நிவர்த்தி செய்...