இந்திய மீனவர்களை மீட்ட இலங்கை கடற்படை!

Friday, August 5th, 2016

படகில் எற்பட்ட இலத்திரனியல் கோளாறு காரணமாக நிர்க்கதியான 3 இந்திய மீனவர்களை மீட்டு இந்திய கடலோர காவற்படையினரிடம் இலங்கை கடற்படையினர் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவம் நெடுந்தீவு கடற்பகுதியில் நடைபெற்றுள்ளது.

தமிழகத்தின் கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்களே இவ்வாறு இந்திய கடலோர காவற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இலத்திரனியல் கோளாறு காரணமாக நிர்க்கதியான குறித்த மீனவர்களை மீட்டதுடன், குறித்த தகவலை இந்திய கடலோர காவற்படையினரிடம் அறிவித்து, குறித்த மீனவர்களையும் அவர்களுடைய படகையும் சர்வதேச கடல் எல்லையில் வைத்து ஒப்படைத்தள்ளனர்.

Related posts:


நாட்டின் எழுத்தறிவு வீதத்தை 100% நோக்கி உயர்த்துவதுடன் அதற்கு அப்பாலும் சென்று புதுமைகள் படைக்கவேண்ட...
திருமண நிகழ்வுகள் இன்றுமுதல் சுகாதார பரிசோதகரின் கண்காணிப்பில் - இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் ...
ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ்கள் பத்திரத்தை கையளித்த பிரித்தானிய மற்றும் வடக்கு அயர்லாந்தின் உயர்ஸ்தானி...