இந்திய எண்ணெய் நிறுவனத்திற்கு (IOC) சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களில் டீசலில் மண்ணெண்ணெய் கலக்கப்படுவதாக முறைப்பாடு பதிவு!
Saturday, September 26th, 2020இந்திய எண்ணெய் நிறுவனத்திற்கு (IOC) சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களில் டீசலில் மண்ணெண்ணெய் கலக்கப்படுவதாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் குறித்து உடனடியாக விசாரணை செய்து தெளிவுபடுத்தக் கோரி தம்புல்ல பொலிஸ் மற்றும் நுகர்வோர் விவகார ஆணையத்திடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
டீசலில் மண்ணெண்ணெய் வாசம் வருவதாகவும், உண்மையில் மண்ணெண்ணெய் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதை அறிய சோதனை நடத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தம்புல்ல பகுதியில் உள்ள பல எரிபொருள் நிலையங்களில் வாகனங்களுக்கு டீசல் நிரப்பும் போது மண்ணெண்ணெய் வாசனை வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
தம்புல்ல காவல்துறையினர் ஏற்கனவே விசாரணையைத் தொடங்கியுள்ளதாகவும், இந்த விவகாரத்தை ஆராய்ந்த பின்னர் ஒரு அறிக்கையை வெளியிட உள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
யாழ் பிரதிப் பொலிஸ்மா அதிபர் பொலிஸ் நிலையங்களுக்கு திடீர் விஜயம்!
பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காணும் சிறந்த தலைமைத்துவம் கொண்டவர் டக்ளஸ் தேவானந்தா ஆவர்களே - ஈ.பி...
2021 ஆம் ஆண்டுக்கான. உயரதர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகள் பிற்போடப்படும் சாத்தியம் - ஆராயப்படுவ...
|
|