இந்திய சேதனப் பசளையே இலங்கைக்கு உகந்தது – விமானம் மூலமாகவேனும் கொண்டுவருவோம் என அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவிப்பு!

Tuesday, October 5th, 2021

இந்திய சேதனப் பசளை இலங்கையில் பாவிப்பதற்கு உகந்தது என ஆய்வுக்கூட பரிசோதனையில் உறுதியாகியுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே நாடாளுமன்றத்தில் இன்று(05) தெரிவித்துள்ளார்.

அத்துடன் உர தட்டுப்பாட்டினை நிவர்த்திப்பதற்காக இந்தியாவிலிருந்து விமானம் மூலமாகவேனும் சேதனப் பசளையை கொண்டு வருவதாக அமைச்சர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக்க பத்திரண உரம் தொடர்பில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே விவசாய அமைச்சர் இதனை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: