நாடு முழுவதும் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்!
Sunday, March 25th, 2018
நாடளாவிய ரீதியில் டெங்கு ஒழிப்பு திட்டத்தை அமுல்படுத்துமாறு அமைச்சர் ராஜித சேனாரட்ன அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.
இதற்கமைய இந்த வருடத்தின் நாடாளவிய ரீதியான முதலாவது டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் அடுத்த மாதம் ஒன்பாதம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இம்முறை 13 ஆயிரத்திற்கு மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளனர்.
கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது இது 50 சதவீத வீழ்ச்சியாகும். இதனைக் குறைக்கும் நோக்கில் மேல் மாகாணத்திலும் மட்டக்களப்பு மாவட்டத்திலும் விசேட நுளம்பு ஒழிப்பு வேலைத்திட்டம்அமுல்படுத்தப்பட்டது.
மேலும் டெங்கு நுளம்புகள் உருவாகும் இடங்களை அடையாளம் கண்டு அவற்றை அழித்துவிட வாரத்தில் குறைந்தது 30 நிமிடமேனும் ஒதுக்க வேண்டும் என்று சுகாதார அமைச்சர்வலியுறுத்தியுள்ளார்.
Related posts:
சிகரெட்டின் விலை அதிகரிப்பு!
தனியார் துறையில் 15 இலட்சம் பேர் வேலையிழக்கும் அபாயம் – கொரோனா அச்சுறுத்தலின் விழைவு என எச்சரிக்கின்...
கிழக்கு மாகாணத்தை ஆட்டம் காணச் செய்தது கொரோனா: ஒரே நாளில் 27 பேருக்கு தொற்றுறுதி – எச்சரிக்கிறார் சு...
|
|