இந்தியாவிடமிருந்து இலங்கைக்கு மேலும் 2 பில்லியன் டொலர் நிதி உதவி!
Thursday, April 14th, 2022
இலங்கைக்கு மேலும் 2 பில்லியன் அமெரிக்க டொலரை வழங்க இந்தியா தயாராகவுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
இலங்கையில் சீனாவின் செல்வாக்கை குறைக்கும் நோக்கில், இந்தியா இவ்வாறு மேலதிக கடன் உதவிகளை வழங்குவதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே, இந்தியா, இலங்கைக்கு 1.9 பில்லியன் அமெரிக்க டொலரை நேரடி கடன் மற்றும் நாணய பரிமாற்ற உதவிகளை வழங்கியுள்ளது.
அத்துடன், அத்தியாவசிய மற்றும் மருந்து பொருட்களுக்கான உதவிகளையும் தொடர்ந்தும் வழங்கி வருகின்றது. இந்தநிலையில், மேலும் இரண்டு பில்லியன் அமெரிக்க டொலரை வழங்க இந்தியா தயாராகியிருப்பதாகவும், அது தொடர்பான உத்தியோகப்பற்றற்ற பேச்சுவார்த்தைகள் தற்போது இடம்பெற்று வருவதாகவும் இந்திய தகவல்களை மேற்கோள்காட்டி, ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளரத குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
வாக்கு மூலம் வழங்க வருமாறு முன்னாள் பாதுகாப்பு செயலாளருக்கு CID அழைப்பு!
பிரித்தானிய உள்ளூராட்சி மன்றத் தேர்தல் - அதிக ஆசனங்களை வென்ற தொழிற்கட்சி!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவவகாரம் - சேனல் 4 குற்றச்சாட்டுகளை விசாரணை செய்ய விசேட தெரிவுக்குழுவை ந...
|
|
|


