போலி பேஸ்புக் கணக்குகள் குறித்து அதிகரித்த முறைப்பாடு!

Thursday, October 5th, 2017

பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தலங்கள் தொடர்பில் இந்த வருடத்தின் இதுவரையான காலப் பகுதியில் 2500 முறைப்பாடுகள் வரை கிடைக்கப் பெற்றுள்ளதாக, இலங்கை கணனி அவசர நடவடிக்கைப் பிரிவு தெரிவித்துள்ளது.

இவற்றில் பெரும்பாலும் பல்வேறு நபர்களின் புகைப்படங்களை பயன்படுத்தி, போலி பேஸ்புக் கணக்குகளை ஆரம்பித்தமை தொடர்பிலேயே முறையிடப்பட்டுள்ளதாக, அந்தப் பிரிவின் பிரதம தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் ரொஷான் சந்திரகுப்த குறிப்பிட்டுள்ளார்.

முன் அறிமுகம் இல்லாதவர்களை தமது பேஸ்புக் கணக்குகளில் நண்பர்களாக இணைத்துக் கொள்வதே இதுபோன்ற குற்றங்களுக்கு காரணமாகிறது என, அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.  இதேவேளை, சிலரின் தொலைபேசி இலக்கங்களைப் பயன்படுத்தி சமூக வலைத் தலங்கள் மூலம் பல்வேறு குற்றச் செயல்கள் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பிலும், அண்மைக் காலங்களில் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக ரொஷான் சந்திரகுப்த மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: