உரமானியத்திற்கு பதிலாக உரப்பசளைகள் வழங்கப்படும்
Tuesday, May 29th, 2018வலிகாமம் தென்மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட சிறுபோக பயிர்ச்செய்கையாளர்களுக்கு காசுக்கான உரமானியத்திற்கு பதிலாக உரப் பசளைகள் வழங்கப்படவுள்ளன.
உரப்பசளை விநியோகத்துக்கான நடவடிக்கையை சண்டிலிப்பாய் கமநல சேவைகள் நிலைய அலுவலர் கே.கோகுலன் எடுத்துள்ளார்.
சிறுபோக செய்கையாளர்களுக்கு வலி. தென்மேற்கு கமநல பிரிவிற்கு உட்பட்ட கமக்கார அமைப்புக்களின் ஊடாக விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதன் பின்னர் விரைவில் சிறுபோக செய்கையாளர்களுக்கான உரப்பசளை விநியோகம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இச் செயற்றிட்டம் மாவட்ட மட்டத்திலும் முன்னெடுக்கப்படுகின்றன.
Related posts:
கையடக்கத்தொலைபேசியால் பலியான உயிர்!
யாழ்ப்பாணத்தில் பாரிய வெடிப்பு சத்தம் - பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை என இராணுவ ஊடகப்பேச்சாளர் அறி...
கடந்த 24 மணி நேரத்தில் இடம்பெற்ற வாகன விபத்துக்களால் 11 பேர் பலி!
|
|